Showing posts with label chathlicpetacost. Show all posts
: Catholic
Catholic Pentecost Mission
chathlicpetacost
chirstmax
christ
church
maadu
malasiya
manathi manan
naike
விளக்கங்கள்
ஒடுக்கப்பட்ட நிலை உன்னைவிட்டு அகன்றுபோம்
உன் கடவுளும் ஆண்டவருமான நான், நீ செல்லும் இடம் எல்லாம் உன்னோடு இருப்பேன் - யோசு 1:9.
நான் உனக்கு வலிமை அளிப்பேன் - எசா 41:10.
உன்னை உருவாக்கிய நானே, உன்னைத் தாங்குவேன் - எசா 46:4.
நான் உன்னை கட்டி எழுப்புவேனேயன்றி, அழித்தொழிக்கமாட்டேன் - எரே 42:10.
இன்று முதல், நான் உனக்கு ஆசி வழங்குவேன் - ஆகா 2:19.
ஏழையானதால் அஞ்சாதே! நீ பெரும் செல்வனாவாய் - தோபி 4:21.
உன் கண்ணீரின் நாட்கள் முடிந்து போகும் - எசா 60:20.
ஆண்டவர், உன் துயரத்தை மகிழ்ச்சியாக மாற்றுவார் - தோபி 7:16.
ஒடுக்கப்பட்ட நிலை உன்னைவிட்டு அகன்றுபோம் - எசா 54:14.
துன்பத்திற்கு பதிலாக, இன்பத்தை அருள்வேன் - எரே 31:13.
அவர் உம் கால் இடறாதபடி பார்த்துக்கொள்வார்; உம்மைக் காக்கும் அவர் உறங்கி விட மாட்டார் - திபா 121 :3.
அவர் உம் கால் இடறாதபடி பார்த்துக்கொள்வார்; உம்மைக் காக்கும் அவர் உறங்கி விட மாட்டார் - திபா 121 :3.
இதோ! இஸ்ராயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை; உறங்குவதும் இல்லை - திபா 121 :4.
ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்; அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்; அவரே உமக்கு நிழல் ஆவார் - திபா 121 :5
பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது; இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது - திபா 121 :6.
ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்; அவர் உம் உயிரைக் காத்திடுவார் - திபா 121 :7.
: Catholic
Catholic Pentecost Mission
chathlicpetacost
chirstmax
christ
church
maadu
malasiya
manathi manan
விளக்கங்கள்
வசதி வரும் போது கடவுளை மறக்காதே
- ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு எனும் உன் மூதாதையருக்கு கொடுப்பதாக, ஆணையிட்டுக் கூறிய நாட்டுக்குள், உன் கடவுளாகிய ஆண்டவர், உன்னைப் புகச் செய்யும் போதும், நீ கட்டி எழுப்பாத பரந்த வசதியான நகர்களையும்,
- நீ நிரப்பாத எல்லா செல்வங்களால் நிறைந்த வீடுகளையும், நீ வெட்டாத பாறைக் கிணறுகளையும், நீ நடாத திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத் தோப்புகளையும், அவர் உனக்குக் கொடுக்கும் போதும், நீ உண்டு நிறைவு கொள்ளும் போதும்,
- அடிமைத்தன வீடாகிய, எகிப்து நாட்டினின்று, உன்னை வெளியே கூட்டி வந்த, ஆண்டவரை மறந்து விடாதபடி, கவனமாய் இரு - இ.ச 6:10-12.
- இன்று, நான் உங்களுக்கு கட்டளையிடுகின்ற கட்டளைகள், நியமங்கள், முறைமைகள், ஆகியவற்றினின்று, வழுவியதன் மூலம், உங்கள் கடவுளாகிய ஆண்டவரை, மறந்து போகாதபடி, கவனமாய் இருங்கள் - இ.ச 8:11.
- நீங்கள் உண்டு நிறைவு கொள்ளும் போதும், அழகிய வீடுகளை கட்டி, அவைகளில் குடியிருக்கும் போதும்,
- உங்கள் ஆடு மாடுகள் பலுகும் போதும், வெள்ளியும் பொன்னும், உங்களுக்கு மிகுதியாகும் போதும், உங்களுக்கு உள்ளதெல்லாம் பெருகும் போதும்,
- நீங்கள் நெஞ்சில் செருக்குற்று, அடிமைத்தனத்தின் வீடாகிய, எகிப்து நாட்டிலிருந்து, உங்களை கூட்டி வந்த, உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து விட வேண்டாம் - இ.ச 8: 12-14.
- அவரே, கொள்ளிவாய்ப் பாம்புகளும், தேள்களும் நிறைந்த, நீரற்று, வறண்ட நிலமான, பரந்த கொடிய பாலைநிலத்தில் உங்களை வழிநடத்தியவர். இறுகிய பாறையிலிருந்து, உங்களுக்காக, நீரைப் புறப்படச் செய்தவர் - இ.ச 8:15.
- உங்கள், மூதாதையருக்கு தெரிந்திராத மன்னாவால், பாலைநிலத்தில் உங்களை, உண்பித்தவர், இறுதியில் உங்களுக்கு நல்லது செய்வதற்காக, உங்களை எளியவராக்கி, சிறுமைப்படுத்தி, சோதித்தவரும் அவரே - இ.ச 8:16.
- எனவே, எங்கள் ஆற்றலும், எங்கள் கைகளின் வலிமையுமே, இந்த செல்வங்களை எங்களுக்கு ஈட்டித் தந்தன என்று, உங்கள் உள்ளங்களில் எண்ணாதபடி, கவனமாய் இருங்கள் - இ.ச 8:17.
- உங்கள் மூதாதையருடன் ஆணையிட்டு செய்து கொண்ட உடன்படிக்கையை உறுதிப்படுத்துமாறு, இந்நாளில் இருப்பது போன்ற, செல்வங்களை ஈட்ட வல்ல, ஆற்றலை உங்களுக்கு அளித்த, உங்கள் கடவுளாகிய ஆண்டவரை, நினைவில் கொள்ளுங்கள் - இ.ச 8:18.
- நன்றி http://www.catholicpentecostmission.in/kathampam.html
இனி நான் மாதா ஜெபமாலை சொல்ல வேண்டுமா?
நான் ஓர் ஆவிக்குரிய அபிஷேகம் பெற்ற கத்தோலிக்கர். அபிஷேகத்துக்கு முன், நான் மாதா ஜெபமாலை சொல்வதுண்டு. இனி நான் மாதா ஜெபமாலை சொல்ல வேண்டுமா?
பதில்
1. மாதா ஜெபமாலை:
- “மாதா ஜெபமாலை” கத்தோலிக்க சபையில் நுழைந்தது, “மரியன்னை பக்தி மூலமாக”.
- மரியன்னை பக்தியை வளர்ப்பதற்கென்றே, கத்தோலிக்க சபையில், சில துறவற இயக்கங்கள் உள்ளன. இது அவர்கள் முழுநேரப் பணி.
- எந்த ஒரு “பக்தி முயற்சியும்” ஆத்மீகத்தின் தொடக்க நிலையே. அவ்வண்ணமே, மாதா ஜெபமாலையும்.
2. பக்தி நிலையும் - விசுவாச நிலையும்:
- கிறிஸ்தவ ஆத்மீகத்தில், “பக்தி நிலையிலிருந்து”, “விசுவாச நிலைக்கு” மக்கள் வளர வேண்டும் - அவர்களைத் திருச்சபை வளர்க்க வேண்டும்.
- “பக்தி நிலை” என்பது, ஆத்மீக வளர்ச்சியின் “ஏணிப்படியே”.
- ஒருவருடைய பக்தி நிலையின் “ஜெப முறைகள்” அவரை, “விசுவாச நிலைக்கு” உயர்த்தும் போது, அங்கே அவரது “ஜெப முறையும்” மாறுகிறது.
- ஜெப முறைகள், வளர்ச்சிக்கான ஏணிப்படிகள் மட்டுமே. அந்த ஏணியிலேயே அமர்ந்து விடுவதும், மக்களை அமர வைப்பதும், ஞானமல்ல.
3. ஸ்தோத்திர ஜெபமும் - பரவச ஜெபமும்:
- விசுவாச நிலை என்பது, ஒருவர் “இரட்சிப்பு – அபிஷேகம்” பெறும் நிலை.
- அங்கே ஜெப வாழ்வு என்பது, “ஸ்தோத்திர ஜெபம்” – லூக் 24:53, பரவச ஜெபம் - தி.ப 2:1-4, 4:31, 10:10, 22:17.
- மேற்சொன்ன ஜெபங்களெல்லாம், “விசுவாசியின் ஜெபம்”.
- தூய ஆவியால் அபிஷேகம் பெற்ற மரியன்னை – லூக் 1:35,41, “செய்த ஜெபமாலை” “ஸ்தோத்திர ஜெபமும்” – தி.பா 1:14, லூக் 24:53, “பரவச ஜெபமும்” – தி.ப 2:1-4.
4. நிறைவானதும், குறைவானதும்:
- நிறைவானது வரும்போது, குறைவானது ஒழிந்து போகும் - 1கொரி 13:10,11.
- ஜெபமாலை செய்வது பாவமல்ல.
- இருளில்இருப்பவர்க்கு “மெழுகுதிரியின் ஒளி” உயர்ந்தது.
- பகல் வெளிச்சத்தில் இருப்பவர்க்கு, மேற்சொன்ன ஒளி தேவையா என்பதை, அவரவர் ஆத்மீக நிலையில் முடிவெடுக்க வேண்டும்.
- நன்றி http://www.catholicpentecostmission.in
Subscribe to:
Posts
(
Atom
)