Showing posts with label ஆயுதங்களைக். Show all posts
லண்டனில் 454 பேர் மீது ‘ஆசிட்’ வீச்சு
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் துப்பாக்கி, வெடிகுண்டு, கத்தி போன்ற ஆயுதங்களால் நடத்தப்படும் தாக்குதல்களை விட ‘ஆசிட்’ வீச்சு சாதாரணமாகி விட்டது.
இங்கு பணம் கொள்ளையடிக்க அவரது உடலில் ஆசிட் வீசப்படுகிறது. இதனால் பலர் தங்களது முக அழகையும், கண்பார்வையையும் இழந்து வருகின்றனர்.
கடந்த ஆண்டில் மட்டும் 454 ஆசிட் வீச்சு சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. அதேபோன்று 2015-ம் ஆண்டில் 261 பேரும், 2014-ம் ஆண்டில் 166 பேரும் ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிட் வீச்சு சர்வ சாதாரணமாக நடைபெறுவதால் லண்டன் வீதிகளில் சுதந்திரமாக நடந்து செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதற்கிடையே இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிப்பதற்கு ஆசிட் வகைகள் எளிதாக கிடைப்பதுவே காரணம் என கூறப்படுகிறது.
எனவே ஆசிட் விற்பனை செய்ய கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இங்கு பணம் கொள்ளையடிக்க அவரது உடலில் ஆசிட் வீசப்படுகிறது. இதனால் பலர் தங்களது முக அழகையும், கண்பார்வையையும் இழந்து வருகின்றனர்.
கடந்த ஆண்டில் மட்டும் 454 ஆசிட் வீச்சு சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. அதேபோன்று 2015-ம் ஆண்டில் 261 பேரும், 2014-ம் ஆண்டில் 166 பேரும் ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிட் வீச்சு சர்வ சாதாரணமாக நடைபெறுவதால் லண்டன் வீதிகளில் சுதந்திரமாக நடந்து செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதற்கிடையே இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிப்பதற்கு ஆசிட் வகைகள் எளிதாக கிடைப்பதுவே காரணம் என கூறப்படுகிறது.
எனவே ஆசிட் விற்பனை செய்ய கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
எங்களின் மரபு வழி தமிழகத்தை காப்பாற்றுங்கள்!
எங்களின் மரபு வழி தமிழகத்தை காப்பாற்றுங்கள்! ஐ.நா சபையில் கௌதமன்
எங்களின் மரபு வழி தமிழகத்தை காப்பாற்றுங்கள்!
எங்களின் மரபு வழி தமிழகத்தை காப்பாற்றுங்கள்! ஐ.நா சபையில் கௌதமன்
வட மாகாண சபை முதலமைச்சர் மக்களின் கேள்விக்கு பதில்
வட மாகாண சபை முதலமைச்சர் மக்களின் கேள்விக்கு பதில்
ஆபரேசன் "வெட்டிங் ஹால்".. மனித வெடிகுண்டுகள் மூலம் சென்னையைத் தகர்க்கத் திட்டமிட்ட தீவிரவாதிகள்
மும்பையில் நடத்தப்பட்ட 26/11 தீவிரவாத தாக்குதல் போல தென்னிந்தியாவில் சதிவேலைகளை அரங்கேற்ற திட்டமிருந்த தீவிரவாதிகள் சென்னையில் ஸ்லீப்பர் செல்களாக தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். ‘ஆபரேசன் வெட்டிங் ஹால்' என்ற பெயரில் சென்னையில் உள்ள முக்கிய இடங்களை தீவிரவாதிகள் தகர்க்க திட்டமிட்டிருந்தனர். இந்த திட்டத்தில் தொடர்புடைய முகமது உசேன் என்ற தீவிரவாதியை மலேசியாவில் கடந்த ஆண்டு போலீசார் கைது செய்தனர். அவனை இந்தியாவிற்கு கொண்டு வருவது பற்றி தீவிர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் அதில் சிக்கல் நீடிக்கிறது.
முகமது உசேனை நாடு கடத்திக் கொண்டு வந்து விசாரணை நடத்த தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை எடுத்தது. அவருக்கு எதிராக சர்வதேச போலீஸ் மூலம் இந்தியா ‘ரெட்கார்னர் நோட்டீஸ்' பெறப்பட்டது. ஆனால் பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தியும் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டு வருவதில் சிக்கல் நீடிக்கிறது. இது தொடர்பான அனுமதியை வழங்க எதிர்ப்பு தெரிவித்து மலேசிய அட்டார்னி ஜெனரல் அலுவலகம் போர்க்கொடி உயர்த்தியது. காரணம் முகமது உசேன் இலங்கை குடிமகன் என்பதால், மலேசியாவில் இருந்து மூன்றாவது நாட்டுக்கு (இந்தியா) நாடு கடத்திக்கொண்டு செல்லும்போது, இதில் இலங்கையின் ஒப்புதலும் பெறப்பட வேண்டும் என மலேசிய அட்டார்னி ஜெனரல் அலுவலகம் கருதுகிறது. எனவே அவரை இலங்கையின் ஒப்புதலின்றி இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வர முடியாத நிலை நீடிக்கிறது.
தூதரக அதிகாரி சித்திக் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் இலங்கை தலைநகர் கொழும்பில் பணியாற்றிய தூதரக அதிகாரி அமீர் சுபைர் சித்திக்கின் பெயரை கூறியுள்ளனர். சித்திக்தான் முதலில் இரண்டு இலங்கை நாட்டவரை சென்னை அனுப்பி உளவு பார்க்க வைத்தான். அந்த இருவர்தான் அருண் செல்வராஜன் மற்றும் ஜாகிர் ஹூசைன். இவர்கள் சென்னைக்குள் ஊடுருவி மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் உட்பட குண்டுவெடிப்பை நடத்துவதற்கு வாய்ப்புள்ள மிக முக்கியமான இடங்களை உளவு பார்த்து தகவல்களைத் திரட்டினர்.
அருண் செல்வராஜூக்கு சிக்கல் ஏற்பட்டால் சித்திக் மேலும் பலரை அனுப்பி வைக்க திட்டமிட்டிருந்தான். முகம்மது உசேனின் முக்கியத்துவம் இந்த தாக்குதல் திட்டத்திற்கு முக்கிய மூளையாக செயல்பட்டவன் முகம்மது உசேன். இது குறித்து ஒன் இந்தியாவிடம் பேசிய தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரி, தீவிரவாதி ஜாகிர் மூலம் அமெரிக்க தூதரகம், இஸ்ரேஸ் தூதரகங்களை 26/11 பாணியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார்.
இதற்கு மூளையாக செயல்பட்டவர் இலங்கையில் தூதரக அதிகாரியான சித்திக். இதில் முகம்மது உசேனை மலேசிய போலீசார், இந்தியாவிடம் ஒப்படைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. தற்கொலைப்படையினர் சென்னையில் இரண்டு மனித வெடிகுண்டுகளை உலாவ விட்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டது குறித்து போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளான். இந்த மனித வெடிகுண்டுகள் மலேசியாவை அடிப்படையாகக் கொண்ட தீவிரவாதிகள் என்றும் அவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான பண உதவியை முகம்மது உசேன்தான் செய்து வந்துள்ளான். இதுவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த மனித வெடிகுண்டுகள் மூலம் சென்னை, பெங்களூருவில் தாக்குதல் நடத்தி குழப்பம் விளைவிக்கவும் திட்டமிட்டிருந்தனர் தீவிரவாதிகள். தீவிரவாதிகள் திட்டம் என்ன? சென்னை, பெங்களூருவில் நகரின் மக்கள் நெரிசலாக நடமாடும் இடங்கள் உள்ளிட்ட பல இடங்களில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தனர். அவர்களது நோக்கமே ஒட்டுமொத்த பாதுகாப்பு நிர்வாகத்தையே முடக்கிப் போடுவது என்பதுதான். குண்டுவெடிப்புகளை நடத்திவிட்டு அதில் பாதுகாப்பு தரப்பினர் கவனத்தை செலுத்தும் போது பிற தீவிரவாதிகள் ஏகே௪7 ரக துப்பாக்கிகள் முனையில் சென்னை நகரை கைப்பற்றி பொதுமக்கள், வெளிநாட்டு பயணிகளை பிணைக் கைதிகளாக பிடித்து தாக்குதல் நடத்துவது என்பது ஐ.எஸ்.ஐ. திட்டம்.
5 தீவிரவாதிகள் இதற்காக மொத்தம் 5 பேரை சென்னைக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தனர். இருவர் பாகிஸ்தான் நாட்டவர். எஞ்சிய மூவர் மாலத்தீவு நாட்டைச் சேர்ந்தவர்கள். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இருவரை இலங்கை தூதரகத்தில் பணியாற்றி சித்திக் தயார் நிலையில் வைத்திருந்தான்.. முதலில் அவர்களை பெங்களூருவுக்கு அனுப்பி வைத்து அங்கிருந்து சென்னைக்குள் ஊடுருவச் செய்ய திட்டமிட்டிருந்தனர். அதுவும் முதலில் மாலத்தீவு சென்றுவிட்டு அங்கிருந்து மூன்று தீவிரவாதிகளுடன் இணைந்து அப்படியே பெங்களூருக்குள் ஊடுருவி கடைசியாக சென்னையில் ஒன்றிணைவது இவர்கள்து ப்ளான்.
இந்த 5 பேருக்கும் கொழும்பு மற்றும் மாலத்தீவில் பயிற்சி அளிக்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருந்தனர்.. சென்னை கடைவீதிகளில் தாக்குதலைத் தொடங்கி கடைசியாக அமெரிக்கா தூதரகத்தை தகர்ப்பது என்பது ஐ.எஸ்.ஐ. போட்டுக் கொடுத்த திட்டம். ஆபரேசன் வெட்டிங் ஹால் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு வைத்திருந்த பெயர் ஆபரேசன் வெட்டிங் ஹால் என்பதாகும். ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகளின் திட்டப்படி, சென்னையின் முக்கிய நகரங்களை தாக்கும் தீவிரவாதிகள் இறுதியாக அமெரிக்க தூதரகத்தை தங்களின் கைப்பிடிக்குள் கொண்டுவர திட்டமிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக நம் தேவன் வெளிபடுத்திய தீர்கதரிசனம் காணக
முரட்டு இனம் தீ விரித்தது வருகிறர்கள் சென்னை பட்டணத்தை குறி வைக்கின்றனர்
நன்றி அதிர்வு http://www.athirvu.com/newsdetail/3673.html
முரட்டு இனம் தீ விரித்தது வருகிறர்கள் சென்னை பட்டணத்தை குறி வைக்கின்றனர்
முரட்டு இனம் தீ விரித்தது வருகிறர்கள் சென்னை பட்டணத்தை குறி வைக்கின்றனர் கலவரத்தை ஏற்படுத்தவும் குழந்தைகளை கடத்தவும் கொல்லவும் தயாராகிறார்கள்
யார் அந்த முரட்டு இனம் ???
தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றம் வரும்
தீவிரவாதிகள் தமிழ் நாட்டை குறிவைக்கின்றனர் 2015 PROPHETIC WORD - Mohan C Lazarus for Tamil Nadu
காங்கிரஸ் ஆட்சியை தேவன் கவிழ்த்து போபோடுவார் !!!
இந்திய அரசியலில் ஈழத் தமிழர்கள் மீதான இன அழிப்பு விவகாரம் எந்த அளவிற்கு, பாரதூர நிலமையை உருவாக்கியுள்ளது என்பதை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் உணர்த்துகின்றது.
அத்துடன், தேர்தல் வெற்றிக்காக எப்படியெல்லாம் தம்மால் 'அந்தர் பல்டி' அடிக்க முடியும் என்பதையும் இந்திய மக்களுக்கு மீண்டும் ஒருமுறை புரிய வைத்துள்ளது காங்கிரஸ் கட்சி.
- கரிகாலன்இந்திய தேசியக் கட்சியான காங்கிரஸ் கட்சி நேற்று, புதன்கிழமை வெளியிட்ட தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில், நாட்டு மக்களுக்கான பல்வேறு திட்டங்களையும், வாக்குறுதிகளையும் தெரிவித்துள்ளது.
அதில், 'இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக குறிப்பிடப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், அதற்காகத் தாம் ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்பட உள்ளதாகவும்' தெரிவித்துள்ளது.
இலங்கைத் தீவில் நடைபெற்ற இறுதி யுத்தத்திலும், அதன் பின்னரான காலப் பகுதியில் அனைத்துலக குற்றச்சாட்டுக்களிலிருந்து சிறிலங்கா ஆட்சியாளர்களைக் காப்பாற்றுவதிலும் இந்திய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் வழங்கிய பங்களிப்பு அபரிதமானது என்பதை உலகம் நன்றாகவே புரிந்து வைத்துள்ளது.
சிறிலங்கா மீதான யுத்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும், மேற்குலகுக்கும் உள்ள மிகப் பெரிய தர்ம சங்கடம் இந்த யுத்தக் குற்றச்சாட்டிற்குள் இந்தியாவையும் இழுத்து விட முடியாத நிலை. திறந்த பொருளாதாரம் வழங்கியுள்ள இந்தியா சார்ந்த மிகப் பெரிய சந்தை வாய்ப்பை இழந்துவிட விரும்பாததே இதற்குக் காரணம்.
இலங்கைத் தீவில் ஆயுத மோதல் ஒன்றை ஊக்குவித்ததுsம், தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியதும், ஆயுதங்களைக் கொடுத்ததும் இதே காங்கிரஸ் கட்சிதான்.
பின்நாட்களில், தமது இலக்கை அடைந்துவிட்ட திருப்தியுடன், அதே தமிழ் இளைஞர்களுடன் போர் தொடுத்ததும், தமிழீழ மண்ணில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் பலி கொள்ளப்பட்டதும், பல நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டதும் இதே காங்கிரஸ் கட்சியினால்தான்.
தமிழீழ மண்ணில் நடாத்தப்பட்ட இறுதிக் கட்டப் போரின்போது, சிங்கள ஆட்சியாளர்களுக்கு வேண்டிய அத்தனை வளங்களையும் வழங்கி, அந்தப் போரை நெறிப்படுத்தி, தமிழின அழிப்பை முற்றாக நடாத்தி முடிக்கும் அங்கீகாரத்தையும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு வழங்கியதும் இதே காங்கிரஸ் கட்சிதான்.
விடுதலைப் புலிகளைப் பழிவாங்கியே தீரவேண்டும் என்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வெறித்தனமான ஆசை, தமிழீழ மக்களது அவலங்களுக்கும், பேரழிவுக்கும் காரணமாக இருந்தது.
இதனையே சிங்கள அரசின் ஜனாதிபதி முதல், அமைச்சர்கள் வரை, 'இந்தியாவின் போரையே நாங்கள் நடாத்தினோம். இந்தியாவின் உதவி இல்லாமலிருந்திருந்தால், இந்தப் போரை நாங்கள் வெற்றி கொண்டிருக்க முடியாது' என்று பல்வேறு சந்தர்ப்பங்களிலும் நன்றியுடன் தெரிவித்திருந்தார்கள். அதனை, காங்கிரஸ் ஆட்சியாளர்கள் என்றுமே நிராகரித்தது கிடையாது.
ஆனால், ஈழத்தின் இறுதிப் போரில் இந்திய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் வகித்த பாகம், தமிழக மக்கள் மனதில் அவர்கள்மீது பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அது காங்கிரஸ் கட்சிக்கு வெகுவாகவே உணர்த்தப்பட்டது. இருந்த போதும், அவர்களது குருட்டு நம்பிக்கை அவர்களது போக்கில் எந்த மாற்றத்தையும் உருவாக்கவில்லை.
யுத்தப் பேரழிவின் பின்னர், அழிவுகளை எதிர்கொண்ட தமிழ் மக்களுக்காகக் கட்டிக்கொடுத்த வீடுகளும், போட்டுக் கொடுத்த ரயில் பாதைகளும் தமிழகத்தில் தங்களை மீண்டும் தூக்கி நிறுத்திவிடும் என்று காங்கிரஸ் கட்சியினர் நம்பினார்கள். அதனையே பல சந்தர்ப்பங்களிலும் தெரிவித்து, தங்களது கொடுஞ்செயல்களை நியாயப்படுத்த முனைந்தார்கள்.
அந்த நம்பிக்கையுடனேயே, ராஜீவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனையை எதிர்கொண்டிருந்த மூவர் உட்பட்ட எழுவரது விடுதலைக்கும் எதிராக, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் எதிர்த்து மேன்முறையீடு செய்தார்கள்.
ஈழத் தமிழர்களுக்கெதிரான காங்கிரஸ் கட்சியின் கொடூரமான அணுகுமுறைகளை தமிழகம் மிகத் தாமதமாகப் புரிந்து கொண்டதனால், காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் அநாதரவாகிப் போனது.
எந்தக் கட்சியுடனும் கூட்டுச் சேர முடியாத நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் எல்லாம் தேர்தலில் போட்டியிடாமல் விலகிக்கொண்டார்கள். தமிழக மக்களது கோபத்தைத் தாண்டி தி.மு.க.வினாலும் இறுதிவரை அவர்களுடன் கரம் கோர்க்க முடியவில்லை.
தமிழகத்தில் கிட்டத்தட்ட காங்கிரஸ் கட்சி போன்றே தி.மு.க.வும் தமிழ் மக்களது அதிருப்திக்குள்ளான கட்சியாகவே உள்ளது. கலைஞர் கருணாநிதி அவர்களது வார்த்தையில் சொல்வதானால், தற்போது 'சகோதர யுத்தம்' ஒன்று திராவிட முன்னேற்றக் கழகத்தை மிக மோசமாகப் பாதித்துள்ளது.
தமிழகத்தில், ஐந்து முனைப் போட்டி இருப்பது மட்டுமே தி.மு.க. தலைவரது இறுதி நம்பிக்கையாக உள்ளது. இதற்காக, காங்கிரஸ் கட்சியுடன் சமரசம் செய்து கொள்ள கலைஞர் முடிவெடுத்துவிட்டார் என்பதை அவரது அறிவிப்பு உறுதி செய்துள்ளது.
காங்கிரஸ்காரர்கள் நாளைக்கு மனம் வருந்தினால், அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதுடன், மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு வழங்குவோம்;' என்று கலைஞர் கருணாநிதி அறிவித்து 24 மணித்தியாலங்களுக்குள் காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஈழத் தமிழர் விவகாரமும் இணைக்கப்பட்டுள்ளது.
அதாவது, கலைஞர் கருணாநிதி அவர்கள் காங்கிரசுடன் மீண்டும் கைகோர்ப்பதற்குத் தடையாக இருந்த 'ஈழத் தமிழர் விவகாரம்' இந்தத் தேர்தல் அறிக்கை மூலம் திருத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் கையும் ஈழத் தமிழர்கள் மீது அக்கறை கொண்டுள்ளதாக, அவர்களை நோக்கித் திருப்பி வைக்கப்பட்டுள்ளது.
எதையும் அரசியலாக்கி, அதில் தனது குடும்ப இலாப நட்டங்களை மட்டுமே கணக்கிடும் தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்கள் ஈழத் தமிழர்களது இன அழிப்பு விவகாரத்தையும் அரசியலாக்கி, காங்கிரஸ் கட்சி ஊடாக இலாபத்தைக் காண முயற்சிக்கின்றார்.
காங்கிரஸ் கட்சியோ, தமிழகத்தில் இல்லாமல் போன செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்த ஈழத் தமிழர் விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது. இதைத் தவிர, இனஅழிப்பின் சூத்திரதாரர்களான இந்த இரு தரப்பாலும் ஈழத் தமிழர்களுக்கு எந்த நல்லதும் நடந்துவிடப் போவதில்லை.
Subscribe to:
Posts
(
Atom
)